Saturday, March 1, 2014

விடா முயற்சி :



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

இந்த உலகினில் தெய்வத்தால் செய்ய  முடியாத காரியம் என்ற ஒன்று இருக்க முடியாது ,அப்படிப்பட்ட இறைவனாலேயே செய்ய இயலாத ஒரு காரியம் இருந்தாலும் ,அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உடல் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் .
சில வேளைகளில் நாம் ஒரு பணியை மேற்கொண்டு அதில் ஏற்படும் சிறு சிறு தோல்விகள் ,பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து   பாதியிலேயே நிறுத்தி விடுகின்றோம் .அவ்வாறாக இல்லாமல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து ,புதிய ஒரு கோணத்தில் அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி மட்டும் யோசித்து விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்வோமானால் வெற்றி நமக்கே .
ஒரு நிருபர் தாமஸ் ஆல்வா எடிசனை பார்த்து நீங்கள் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் ? என்று கேட்டார் .அதற்கு எடிசன் நான் 1000 முறை தோல்வி அடையவில்லை இந்த மின்சார விளக்கு ஆயிரம் வழிமுறைகளை சோதித்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு .ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்யும்போதும் எந்த முறைகளில் எல்லாம் மின்சார விளக்கை எரிய வைக்க முடியாது என்று என்று கண்டு பிடித்தேன் என்றார் .
மற்றவர்களின் பார்வையில் ஒரு செயல் தோல்வியாக தெரிந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை .நாம் யார், நம்முடைய குறிக்கோள் என்ன  ,எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்  என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்குள்ளே மட்டுமே உள்ளது. எடிசனுக்கு முன்னரும் ,அவர் முயற்சி செய்த அதே காலத்திலும் பலர் மின்சார விளக்கை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் .அவர்கள் அனைவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள்  ,தடங்கல்களை எண்ணி பாதியிலேயே தங்கள் முயற்சியை நிறுத்தி இருப்பார்கள் .தொடர்ந்து முயன்ற எடிசன் வெற்றியைக் கண்டார் .
விடா முயற்சியைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு கருத்தை  நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ,விடா முயற்சி செய்யும் பொது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் .ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப்  பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் ,அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது ,விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில்  ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது ,பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது .நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாக பாடம் கற்கவில்லை அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்கவேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாக பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் .
உங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும் ,உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும் ,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும் ,அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே .

சரவணன் பாலாஜி 


Saturday, December 21, 2013

The Best Real Life Motivational Story – Károly Takács

The Best Real Life Motivational Story – Károly Takács

14AUG

karoly Takacs 001
The moment I finished the first page of my first and most favorite motivational book “The Magic of Thinking Big” by David J. Schwartz, I have been looking for tools to craft a better “me”. I have been trying to bring out the best in me. I have browsed many books, sites and articles and I have found a plenty of tools that can come in handy. There is this one story in particular that I can’t wait to share with you. It’s about a sergeant in Hungarian army – Károly Takács.
Károly was the top pistol shooter of the country back in 1938 (age – 28 yrs). He won most of the major national and international championships. He seemed closest to winning the 1940 Tokyo Olympic Games gold medal. All the dreams turned to dust one day. A hand grenade exploded in Károly’s right hand, his shooting hand at an Army training session. That hand grenade ended up destroying his shooting hand and his Olympic dream.
“Of all the people in the world, why me?” Like most of us Károly could have asked this question “why me?”. But he didn’t. Now I am not very sure what happened during the time he was hospitalized. But chances are people were discussing about the tragedy that has fallen on him, about how cruel can the creator be?, about what will he do in future. I am pretty sure people would have discussed these things. But not Károly, he had nerves of steel, stainless steel. He could have looked for sympathy. Instead he looked for ways to convert his dream into beautiful reality.
After spending a month in hospital, he decided not to feel pity for himself for the rest of his life. He held on to his Olympic dream. He had the will, he had the attitude, he had the determination to succeed, and he figured he had a healthy, fully functional hand. He decided to practice shooting from his left hand. Despite the pain he had to undergo, despite the fact that he was not left handed, he focused on his goal and practiced. To achieve anything worthy in life one needs attitude and will. Skills and techniques can learned, can be taught, but not will. He chose not dwell in the world of facts, he chose to explore the world of possibilities. He was determined to make his left hand the best shooting hand in the world.
One year later Károly resurfaced at a National shooting championship in Hungary. His colleagues were delighted to see him and complimented him on his courage to come up at the championship to cheer for them. But Károly surprised them by saying he was there to compete with them. And he won. One year after losing his right hand and he trained himself and won. Who in the world except Károly himself would have thought this was even possible. People who believe in facts will never be able to explain this. Facts leave no room for possibilities.
Károly’s Olympic dream could not be fulfilled for quite some time as two Olympic Games were cancelled due to world war. In 1948 Olympic Games were held in London. Károly was chosen to represent Hungary in pistol shooting event. Károly never felt he was beneath any individual. He practiced, he participated, he WON. Shooting with his left hand. Imagine being a gold medal favorite, losing your shooting hand in an accident, yet picking yourself up from a shattered mess, training your left hand to shoot as well (or better), and going on to win the Olympic gold medal.
Four years later, in Helsinki Olympics. Károly won another gold medal in shooting event. Shooting with his left hand. This is the stuff champions are made of. We all have faced failures in life, we feel defeated, crushed, beaten. The next time you feel that think of Károly. Don’t cry and say why me? Don’t worry about what you’ve lost, focus on what you still have. No hand grenade can blast your will, mental strength and determination.
Don’t lose yourself to self pity. get up quickly and do it now. Many great speakers of the world have confirmed this fact. In words of Confucius “ Our greatest glory is not in never falling, but in rising every time we fall “. Károly was out practicing in a month after the accident. He never let self-pity to take control.
Prakash Iyer mentioned in his book The Habit of winning Winning a gold medal in Olympic is less about the hand, more about the mind. Life is like that. Winning is less about skills, more about attitude“.

பேரறிஞர் அண்ணாதுரை

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: பேரறிஞர் அண்ணாதுரை


தமிழ். ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை.
மும்மொழி வித்தகரான இவர் பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.
இளமைக் காலம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 15, 1909 ஆம் ஆண்டு நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பமான திரு. நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் மகனாப் பிறந்தார்.
இவரின் தந்தை ஒருநெசவாளர். தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார். மாண வப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமக்கையின் பேரக் குழந்தைகளை த்ததெடுத்து வளர்த்தனர்.
பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார்.
கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.
ஆசிரியர் பணி:
பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
பத்திரிக்கை பணி
1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதினார்.
அரசியலில் நுழைவு: அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது) 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.
பெரியாருடன் கருத்து வேறுபாடும் திமுக உருவாக்கமும்:
பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் பிரிந்துகொண்டதால் கருத்து வேறுபாடு கொண்டு, அண்ணாதுரை மற்றும் பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி (17.10.1949) அன்று அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்க தொடங்கினார். இருதியில் 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களின் ஆதரவையும் ஆவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிவிதமான செல்வாக்கை பெற்றது.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
அறிஞர் அண்ணாதுரை அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதப்படுகின்றது.
கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் அரசிலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் அளித்திடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும் என்பது அண்ணாவின் கொள்கையாகும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
இந்தியா 1950 இல் அரசிலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பின்பு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தன் அங்கீகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1965 இல் அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் - தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது. அவ்வாண்டின் இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர் 1940 இல் மதராசு ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இநதிக் கல்வியை விலக்கினார்.
இந்தியாவின் ஆட்சி மொழியக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை
இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது. அது பெரும்பாண்மை மக்களால் பேசப்படுவதால், ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? உண்மையில் பெரும்பாண்மையாக இருப்பது எலி தானே அல்லது ஏன் மயில் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் பெரும்பாண்மை பறவை காகம் தானே?
தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும் வரை எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.
இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய் மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது என்றார்.
மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.
சட்டப்பேரவையில் அண்ணாதுரை
சட்டப்பேரவையில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்ட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.
* மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர். நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.
* 1957 இல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.
* 1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.
* 1967 இல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.
* 1962 இல் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியனரே வியக்கும் விதமாக மிக சாதுர்யமாக பதில் அளித்தார். பேரவையில் அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு  அண்ணாதுரை அவர்கள் நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.
மொழிப்புலமை
ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம், "ஏனென்றால்" என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர். அதற்கு அண்ணாதுரை அவர்கள்,
"No Sentence can begin with because, because, because is a conjunction" அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல் என்றார்.
இலக்கியப் பங்களிப்புகள்
அண்ணாதுரை மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக அடுக்கு மொழிகளுடன்., மிக நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறனும், எழுத்தாற்றலும் பெற்றவர்.
திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி(1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி(1949) மற்றும் ஓர் இரவு போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன.
இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்க பலமாக விளங்கியவர்கள் டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, என.எஸ்.கிருஷ்ணன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்.
மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969 இல் மரணமடைந்தார். அவர் பொடி நுகரும் பழக்கம் உடையவர் இதனால் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி, இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் பொன்மொழிகள்
"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்"
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. (வேலைக்காரி நாடகத்தில்-1945)
அண்ணாதுரையின் முதல் படைப்புகள்
முதல் கட்டுரை - தமிழில் மகளிர் கோட்டம் - 19.03.1931
முதல் கட்டுரை - ஆங்கிலத்தில் MOSCOW mobparade - 1932
முதல் சிறுகதை - கொக்கரக்கோ - 11.02.1934
முதல் கவிதை - காங்கிரஸ் ஊழல் - 09.12.1937
முதல் கடிதம் - பகிரங்க்க் கடிதம் 02.09.1938
முதல் குறும் புதினம் - கோமளத்தின் கோபம் - 07.1939
முதல் புதினம் - வீங்கிய உதடு - 23.03.1940
முதல் நாடகம் - சந்திரோதயம் - 05.06.1943
அண்ணாதுரை புனைப்பெயர்கள்
செளமியன், பரதன், நக்கீரன், வீரன், குறம்போன், துறை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்பேோக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர்.
நினைவுச் சின்னங்கள்
* தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது.
* அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* சென்னை மெரினா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
* எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச் செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
* சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன.
* வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம்  திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
* 2009 ஆம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
* 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.

Friday, December 20, 2013

மனம் எனும் அற்புத சக்தி 1

மனம் எனும் அற்புத சக்தி 1
                                         மனிதன் நினைத்தாள் எதையும் சாதிக்க முடியும் என்று நாம் பல வெற்றியாளர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்  ,படித்திருப்போம் ஆனாலும் நம் மனம் பல நேரங்களில் இதை ஏற்றுக்க கொள்வதில்லை ,வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துவது இல்லை, நாம் அதை ஏற்றுக் கொண்டாலும் நம்முடன் இருக்கும் சிலர் அல்லது நமது சமூகம் நம்மை எதிர்மறையாக பேசி நம்முடைய நம்பிக்கையைக்  குறைத்து விடுகின்றனர் .இப்படிப் பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்காக மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி காண்பது,எதிர்மயையாக பேசுபவர்களை எவ்வாறு சமாளிப்பது , வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்கள் மனதை எவ்வாறு பயன்படுத்தி வெற்றி கொண்டனர் என்பதை வரும் பதிவுகளில் காண்போம்  ,
     உங்களால் முடியும் உங்களால் முடியாது என்று நீங்கள் எதை எண்ணினாலும் இரண்டும் சரிதான் .இது ஹென்றி போர்ட் அவர்களின் அனுபவ வார்த்தைகள் .

Wednesday, December 18, 2013

சச்சின் ஒரு சகாப்தம்

22 கஜங்கள், 24 ஆண்டுகள், மறக்க முடியாத தடங்கள் 
இந்திய கிரிக்கெட் அணி 1983இல் உலகக் கோப்பையை வென்றது. அதுவரை சோப்ளாங்கியாக இருந்த அணி உலக கிரிக்கெட் அரங்கில் முதலிடம் பிடித்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அதன்பிறகு இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் பெருகினார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பும் பின்னரும் இந்தியாவில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்தார்களே ஒழிய அது மிகச் சிறந்த அணியாக இருந்ததில்லை.

80களில் சுனில் காவஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், திலிப் வெங்சர்க்கார் போன்ற மிகச் சிறந்த மட்டையாளர்களும் கபில்தேவ், மொஹீந்தர் அமர்நாத், மனோஜ் பிரபாகர் போன்ற ஆல்ரவுண்டர்களும் இருந்தார்கள். சந்தீப் பாட்டீல், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் இந்தியர்களுக்குப் பழக்கமில்லாத அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் அரங்கில் காட்டிப் பரபரப்பு ஏற்படுத்தினார்கள். முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து போன்ற நேர்த்தியான மட்டையாளர்கள் புதிதாக இணைந்தார்கள். இருந்தாலும் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவிக்கும் அணியாக இருக்கவில்லை. உலக அரங்கில் மதிப்புப் பெற்ற அணியாகவும் இருக்கவில்லை. காரணம் உலக அரங்கில் சவால்விடும் அளவுக்கு அசாத்தியமான திறமையும் போராடும் குணமும் இவர்கள் யாரிடமும் இணைந்திருக்கவில்லை. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்ளத் திராணியற்ற அணியாகவே இந்திய அணி இருந்தது.

இந்தச் சூழலில்தான் 16 வயதுச் சிறுவன் ஒருவன் அணிக்குள் வந்தான். மும்பையில் பள்ளிப் போட்டிகளிலும் ரஞ்சி கோப்பையிலும் அவன் அடித்த ஓட்டங்கள் அவனை இந்திய அணிக்கு ஆடவைத்தன. 1989 நவம்பர் 15 அன்று பாகிஸ்தான் அணியை அதன் மண்ணில் எதிர்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தான். அவன் பெயர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

அந்தப் பையன் இன்று கிரிக்கெட் களத்தில் இல்லை. எத்தனையோ பேர் வந்துபோன களம்தான் அது. ஆனால் இவனது வருகையும் விடைபெறலும் சாதாரணமானதாக இல்லை. அந்தச் சிறுவன் உலகப் புகழ்பெற்ற மட்டையாளனாக, கோடிக்கணக்கான ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக ஆராதிக்கப்படுபவனாக, நேற்றைய சாதனையாளர்களும் சமகால வீரர்களும் வியந்து பார்க்கும் நாயகனாக வளர்ந்து நிற்கிறான். தேசமே அவனுக்குக் கண்ணீருடன் பிரியாவிடை தருகிறது. ஊடகங்கள் அவன் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. வீடுகளின் வரவேற்பறைகளும் பொது இடங்களும் அவனைப் பற்றிய உரையாடல் களமாக மாறியிருக்கின்றன.

இந்த 24 வருட இடைவெளியில் சச்சின் செய்த சாதனைகளையும் கடந்து வந்த சோதனைகளையும் வைத்துத் தனிப் புத்தகமே எழுதலாம். ஆனால் 24 வருடங்கள் முன்னணி வீரனாக, நம்பிக்கை நட்சத்திரமாக, கிரிக்கெட்டில் ஒளி குன்றாச் சூரியனாக அவர் விளங்கியமைக்குச் சாதனைகளை மீறி வேறு பல காரணங்கள் இருக்கின்றன.


இந்தியாவை எள்ளலுடன் எதிர்கொண்ட அணிகள் சச்சின் டெண்டுல்கரை மட்டும் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் களத்தில் இருக்கும் வரை இந்த அணிகளில் உள்ள அனைவரும் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்திக் கவனத்தைச் சிதறவிடாமல் விளையாடுவார்கள். கார்ட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்ப்ரோஸ், ஆலன் டொனால்ட், வாசிம் அக்ரம். வக்கார் யூனுஸ், க்லென் மெக்ரா, ஷேன் வார்ன், முத்தையா முரளீதரன், டேல் ஸ்டெயின் ஆகிய உலகப் பெரும் பந்து வீச்சாளர்கள் சச்சினுக்குப் பந்து வீசும்போது மட்டும் மிகக் கவனமாகச் செயல்படுவார்கள். ஏனெனில் மிகச் சிறந்த பந்துகளில்கூட அனாயசமாக ஓட்டமெடுக்கும் வித்தையில் சச்சின் தேர்ந்திருந்தார். இது மோடி மஸ்தான் வித்தையல்ல. ஒரு நாளின் ஏழு மணிநேரங்களைப் பயிற்சியில் செலவழித்த அர்ப்பணிப்புணர்வுக்குக் கிடைத்த பரிசு.

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விளையாட்டிலாவது இந்தியாவால் ஆதிக்கம் செலுத்த முடிந்ததற்கு முக்கியமான காரணம் சச்சின். 90களில் பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த இந்தியர்களுக்கு, குறிப்பாக நடுத்தர வர்கத்தினருக்கு இதனால் கிடைத்த மனத்திருப்தி சச்சினை அவர்களது ஆதர்ச நாயகனாக்கியது. சச்சின் ஆட்டமிழந்தால் இந்திய அணி தோற்றுவிடும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் மட்டுமல்ல, எதிரணிகளிடமும் பல ஆண்டுகளுக்கு நிலவியது. வெற்றிபெறுவதை விட சச்சின் விக்கெட்டை எடுப்பதை எதிரணியினர் அதிகமாகக் கொண்டாடுவார்கள். சச்சின் ஆட்டமிழந்த மாத்திரத்தில் பல வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி அணைக்கப்படும். மறுநாள் காலைதான் போட்டியின் முடிவைத் தெரிந்துகொள்வார்கள். இந்தியா வெற்றிபெற்றது என்ற செய்தி மிக அரிதாகவே இடம்பெறும்.

சச்சின் ஆட்டத்தில் பல்வேறு நுணுக்கங்களைப் புகுத்தினார். வெறுமனே நிற்பது அல்ல கிரிக்கெட் என்பதை நிறுவினார். நல்ல அளவில் வரும் பந்தை எப்படி எதிர்கொள்வது என்பதிலும் முன்னே சென்று ஆடும் தடுப்பாட்டத்தை எப்படி ஓட்டம் எடுக்கும் உத்தியாகப் பயன்படுத்துவது என்பதிலும் துடுப்பாட்ட மட்டைவீச்சில் புது இலக்கணம் வகுத்தார். பின்காலில் சென்று அவர் ஆடும் அனாயாசமான கவர் ட்ரைவும் தனிப்பாணியிலான ஸ்ட்ரெய்ட் ட்ரைவும் கிரிக்கெட்டின் மிக அழகான காட்சிகளில் ஒன்றாக நிலைபெற்றுள்ளன. பெடல் ஸ்வீப் போன்ற சில ஷாட்கள், லெக் ஸ்பின்னரை இறங்கி வந்து இன்சைட் அவுட் ஷாட் அல்லது லாஃப்ட்ட் ஷாட் மூலம் இவர் எதிர்கொண்ட விதம் பிற மட்டையாளர்களுக்குப் பாடமாக விளங்கின. யாரும் ஆடாதபோதும் சச்சின் தொடர்ந்து நன்றாக ஆடினார். தொண்ணூறுகள் முழுவதும் இந்த நிலை நீடித்தது. இந்தக் குணத்தின் அடையாளமாக 1997 ஷார்ஜா போட்டிகளையும் 1999 சென்னை போட்டியையும் சொல்லலாம்.

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் இந்திய அணி வலுப்பெறத் தொடங்கியது. ஆனால் அப்போதும் அந்நிய மண்ணில் பெரிதாகச் சாதிக்காத அணியாகவே இருந்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்த 2003 உலகக் கோப்பையில் மிகச் சாதாரணமான அணியாக ஆடத் தொடங்கியது. ஆனால் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அதில் சச்சினின் சதங்களும் அரை சதங்களும் முக்கியப் பங்காற்றின.

சச்சின் பல மோசமான உடல் காயங்களைச் சந்தித்திருக்கிறார். அவற்றிலிருந்து போராடி மீண்டு வந்தார். அந்தக் காயங்களால் அவரது ஆட்டத்திறன் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. சந்தர்ப்பத்துக்கேற்பத் தன் ஆட்டத்தைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் அவருக்கு இருந்தது.

2007 உலகக் கோப்பையில் நம்பிக்கையுடன் களம் கண்ட இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. அப்போதுதான் சச்சினுடைய கிரிக்கெட் வாழ்வின் அந்திமக் காலம் தொடங்கிவிட்டதாகப் பலர் கருத ஆரம்பித்தார்கள். ஆனால் சச்சின் இதிலிருந்தும் மீண்டுவந்தார். 2007இல் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக ஆடினார்.

மீண்டும் 2009, 2010ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கத் தொடங்கினார் சச்சின். மீண்டும் ஓய்வுபெற வேண்டும் என்ற குரல்கள் எழும்பின. ஆனால் 2009இல் ஆஸ்திரேலியாவுடன் அடித்த அதிவேக 175ஐக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். 2010இல் தென் ஆப்ரிக்காவுடனான ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துத் தன் ஆட்டத்துக்கு வயதாகவில்லை என்று நிரூபித்தார் சச்சின்.

2011 உலகக் கோப்பையை இந்தியா வென்றதிலும் சச்சினுக்கு முக்கியமான பங்கு இருந்தது. தொடரில் மிக அதிக ஓட்டங்கள் குவித்த முதல் இரண்டு வீரர்களில் ஒருவர் சச்சின். அப்போது அவருக்கு 38 வயது.

2011 உலகக் கோப்பைக்குப் பிறகு சச்சினின் ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. 100ஆவது சதத்தை நோக்கிய பயணம் மிகக் கடுமையானதாக இருந்தது. அவ்வப்போது அரை சதங்கள் எடுத்தார். சில போட்டிகளில் 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்தார். வெற்றிக்குப் பெரிதாகப் பங்களிக்க முடியவில்லை. கடைசியாக வங்காளதேச அணியுடன்தான் 100ஆவது சதத்தை அவரால் அடிக்க முடிந்தது.

அதன்பின் சச்சின் பெரிய சாதனை எதுவும் செய்யவில்லை. ஐம்பதுகளை நூறாக மாற்றவும் நெடுநேரம் நின்று ஆடவும் ஆட்ட நுணுக்கத்துடன் உடல்திறன் உச்சத்தில் இருப்பதும் முக்கியம். 38 வயதுக்குப் பிறகு அதை எதிர்பார்க்க முடியாது. நடுவர்களின் தவறுகளுக்கும் அவர் பலியாகிக்கொண்டிருந்தார். ஆனால் எப்போது வேண்டுமானாலும் பழைய திறனுடன் ஆடிவிடுவார் என நினைக்கும் விதத்தில்தான் சச்சின் அடிக்கும் ஷாட்கள் இருந்தன. இந்த ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் கடைசி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராகவும் ஆடிய ஆட்டங்களே இதற்குச் சான்று.

மும்பை வான்கடே மைதானத்தில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தன் கடைசி இன்னிங்க்ஸை விளையாடினார். வரலாறு காணாத அந்த எதிர்பார்ப்புகளின் அழுத்தம் அவர் ஆட்டத்தில் தெரியவில்லை. சதம் அடிக்கவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தாலும் 74 ஓட்டங்கள் எடுத்த அந்த ஆட்டம் தடுமாற்றங்கள் அற்றதாக இருந்தது. இன்னும் சிறிது காலம் இவர் ஆடக் கூடாதா என்று அனைவரையும் ஏங்க வைத்தது.

ஆடுகளத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டு மைதானத்திலிருந்து வெளியேறும்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தன் வாழ்வின் பகுதியாகவே மாறிவிட்ட கிரிக்கெட் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம் என்ற அச்சத்தின் கண்ணீர் அது. அவர் எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட்டை நேசித்தவர். எனவேதான் அவரால் கடைசிப் போட்டிக்குக்கூட முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுக்க முடிந்தது. கடைசிப் போட்டியில் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்ததைப் பற்றித் தன் குருவுடன் விவாதிக்க முடிந்தது.

விஸ்டன் இந்தியா என்னும் அமைப்பு சச்சினைப் பற்றி ஒரு சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது. அதில் புள்ளிவிவரம் சார்ந்த ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. பல்வேறு கோணங்களில் சச்சினின் ஆட்டத்தை அலசும் அட்டவணைகளைப் பார்த்தாலே சச்சின் தன் சமகாலத்தவர்களைவிட முன்னணியில் இருந்ததைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அவரது மிகப் பெரிய சாதனை புள்ளிவிவரங்களின் கணக்குகளுக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும்போதும் மாபெரும் நெருக்கடியைச் சுமந்து ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தாண்டி அவர் இத்தனை சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய சாதனை. இத்தனை கோடிப் பேரின் நம்பிக்கை நட்சத்திரம், இளம் ஆட்டக்காரர்களின் ஆதர்ச நாயகன், எதிரணிகளின் முதன்மை இலக்கு. இவையெல்லாம் புள்ளிவிவரங்களில் தெரியாது. அவர் அவுட் ஆகும்போது சொந்த துக்கமாக அதை மக்கள் கருதுவதும் சிறப்பாக ஆடும்போது தாங்களே சாதித்ததாகக் கருதுவதும் வேறு யாருக்கும் நடக்காத அதிசயங்கள். இந்தத் தன்மைகள்தாம் சச்சினை கிரிக்கெட் வரலாற்றிலேயே உலகில் தனித்துக் காட்டுகின்றன.

சச்சின் ஓய்வுபெறும் போட்டியின் கடைசி நாள் அன்று அவருக்கு பாரத ரத்னா விருதை இந்திய அரசு அறிவித்தது. இதில் அரசியல் இருப்பதாகச் சிலர் விமர்சித்தார்கள். பாரத ரத்னாவுக்கு அவர் தகுதியானவர்தானா என்றும் சிலர் விவாதித்தார்கள். பாரத ரத்னா விருது பற்றி விவாதிக்கலாம். ஆனால் அவர் பாரதத்தின் மதிப்புமிக்க ரத்தினம் என்பதில் விவாதத்துக்கே இடமில்லை. 22 கஜங்களும் 24 ஆண்டுகளும் அதற்குச் சாட்சியாக இருக்கின்றன.

எஸ்.கோபாலகிருஷ்ணன்: இளம் பத்திரிகையாளர்.
மின்அஞ்சல்: gopalasankar87@gmail.com


சச்சினின் போதாமைகள்

டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் வெற்றியை நிர்ணயிக்கும் ஆட்டத்தை அவர் விளையாடியதில்லை என்ற விமர்சனம் சச்சின்மீது வைக்கப்படுவதுண்டு. அவருடைய முதல் சதமே நான்காவது இன்னிங்சில் இங்கிலாந்தில் அடித்ததுதான். ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் அடித்த சதமும் நான்காவது இன்னிங்ஸ் சதம்தான். சென்னையில் 2008இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் சச்சின் அடித்த 103 ரன்கள் இந்தியாவை வெற்றிபெறவைத்தன. பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், திராவிட், லட்சுமணன் போன்றோர் அதுபோன்ற இன்னிங்ஸ்களை சச்சினை விடவும் கூடுதலாக ஆடியிருக்கிறார்கள். ஆனால் நான்காவது இன்னிங்ஸில் சச்சின் சிறப்பாக ஆடியும் பிறர் ஒத்துழைப்பு இல்லாமல் அணி தோற்றதும் உண்டு. டெஸ்ட் போட்டியில் ஒற்றை மட்டையாளரால் அணி வெற்றிபெறுவது மிக அரிதான நிகழ்வு.


விவியன் ரிச்சர்ட்ஸும் ஜெஃப்ரி பாய்காட்டும் சச்சினைப் பற்றிச் சொல்வதைப் படித்தாலே சச்சினுக்கு எதிரான விமர்சனங்களின் போதாமை புரிந்துவிடும். யாருமே 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது என்பதையும் மனதில் கொண்டு சச்சினை மதிப்பிட வேண்டும். சச்சின் 99.5 சதவீதம் முழுமையான மட்டையாளர் என்கிறார் ரிச்சர்ட்ஸ்.

எல்லாவற்றையும் ஒருவரிடமே எதிர்பார்ப்பதும் அவரது மேதமைக்கான சான்று என்றுதான் சொல்ல வேண்டும்

Tuesday, December 17, 2013

தன்னம்பிக்கை கதைகள்-7

பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள்
===========================
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் 
சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.

மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.

முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.

அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.

இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.


பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

தன்னம்பிக்கை கதைகள்-6

காபி கோப்பை
==============
ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.
நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''