Monday, August 30, 2010

மரங்களை வளர்காதீர் -காரம் உள்ளே

இந்திய நீர்வளத்தை கெடுத்த அமெரிக்கா/ஐரோப்பா;உபயம் சீமைக்கருவேலமரம்

மரங்களை வெட்டுங்கள்உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியது நிஜம்.ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.இதன் கொடூரமான குணங்கள்இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.உடம்பு முழுதும் விஷம்இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.அறியாமைநமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.கேரளாவின் விழிப்புணர்வுநமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.நல்ல மரம் ஆரோக்கியம்வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

இந்தியாவின் உள்ளர்ந்த்த பெருமைகள்

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்
இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்இந்தியாவில் தமிழ்நாட்டில் கி.பி.2005 ஆம் வருடம் வரதட்சணை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்களில் 260 புகார்களில் 200 பொய்யானவை.கி.பி.2006 ஆம் வருடம் கொடுக்கப்பட்ட புகார்களில் 285 புகார்களில் 220 பொய்யானவை என தெரியவந்துள்ளது.மாமியார் மற்றும் மனைவியின் பெற்றோர்களின் பணத்தாசையே பெரும்பாலும் காரணம்.தன் மகளின் ஒழுக்கமான எதிர்காலம் பற்றி சிறிதும் கவலையில்லை.ஆக சட்டங்களால் சமுதாய கட்டமைப்பை அழிக்கத்தான் முடியும்.இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களில் மொத்தம் 12,400 காவல் நிலையங்களே உள்ளன.பெரும்பாலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே காவலர்கள் 7 லட்சம் கிராமங்களுக்கும் வருவார்கள்.நாமக்கல்லில் இந்தியாவிலேயே அதிக லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள்.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட கனரகவாகனங்கள் பற்றி ஆய்வு நடத்திட நாமக்கல்லுக்குத்தான் வருகிறார்கள்.அமெரிக்காவில் சாலையோர உணவகங்கள் எனப்படும் மோட்டல்களில் 80% குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.இங்கிலாந்து மான்செஸ்டர் பஞ்சாலைகளை ராம்காடியா சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.திருப்பூரில் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் வெறும் 300 தமிழர்கள் மட்டுமே! இவர்களில் 99% பேர் படிப்பில் 6 ஆம் வகுப்பைத் தாண்டாதவர்கள்.சுதந்திரம் வாங்கிய போது கி.பி.1947 இல் உலக பொருளாதார வளர்ச்சி 4.2%.இந்திய பொருளாதார வளர்ச்சி 2% மட்டுமே!இன்று(அமெரிக்காவைச் சார்ந்திருப்பதால்) உலக பொருளாதார வளர்ச்சி(கி.பி.2007)3.1%இந்திய பொருளாதார வளர்ச்சி 7%நம்மைப் பார்த்தே ஆங்கிலேயர்கள் சமுதாயக் கல்வியில் ஈடுபட்டனர்.

பாரதம் அன்றும் இன்றும்

பாரதம் அன்றும் இன்றும்

பாரதம் அன்றும் இன்றும்கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையானபோர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது?