Sunday, May 22, 2011

இயற்கையிடம் பாடம் படியுங்கள்!

மே 27 - தத்தாத்ரேயர் ஜெயந்தி!

இறைவனே, தத்தாத்ரேயர் எனும் பெயரில், பூமியில் ரிஷியாகப் பிறந்தார். இயற்கையைப் பார்த்து, வாழ்வை வகுத்துக் கொள்ளுங்கள் என, அறிவுறுத்தினார். இவரது வரலாறை கேளுங்கள்...அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசூயாவின் பணி. தினமும், தன் கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை, தலையில் தெளித்த பிறகே, பணிகளைத் துவக்குவாள். அந்தளவுக்கு கணவர் மீது பாசம். குழந்தை இல்லாத அவள், தனக்கு சிவன், விஷ்ணு, பிரம்மாவைப் போல தெய்வக் குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள். மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர். அவளுக்கு, ஒரு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என அவர்கள் யோசனை தெரிவித்தனர். எப்படியும், இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு.அதன்படி, மூவரும் துறவி வடிவில் அவளது குடிசைக்கு வந்து, உணவிடும்படி கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, "பெண்ணே... நீ நிர்வாணமான நிலையில் உணவிட்டால் தான், அதை ஏற்போம்...' என்றனர்; அனுசூயா கலங்கவில்லை. அவளுக்கு, தன் கற்புத்திறன் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு.கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, "நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்...' எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள்; மூன்று தெய்வங்களும் குழந்தைகளாகி விட்டனர்.தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள். நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார். ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு, "தத்தாத்ரேயர்' என்று பெயரிட்டார்.தங்கள் கணவன்மாருக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசூயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கணவன்மாரை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், "உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தையும் வேண்டும்...' என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி.உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர். "ரிஷியே... உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும்; இவன் பெரிய ரிஷியாக விளங்குவான்...' என்று கூறி, மறைந்தனர்.தத்தாத்ரேயர் சிறந்த ஞானியாக விளங்கினார். வேதாந்த உண்மைகளை விளக்கும் அவதூத கீதையை முருகப் பெருமானுக்கு கற்றுக் கொடுத்தார். எந்நேரமும் மகிழ்ச்சியாக இருப்பார். இயற்கையிடம் இருந்து, மகிழ்ச்சியாக வாழ்வதைக் கற்றுக் கொண்டார்."பொறுமை யையும், பிறருக்கு நன்மை செய்வதையும் பூமியிடமிருந்து கற்றேன். தூய்மையை, தண்ணீரிடம் படித்தேன். பலருடன் பழகினாலும் அவர்களிடம் பற்று வைக்கக் கூடாது என்பதை, காற்றிடம் கற்றேன். உணவுக்காக அலையக் கூடாது என்பதை, ஒரே இடத்தில் கிடக்கும் மலைப்பாம்பிடம் படித்தேன். வேடனிடம் தாய்ப்புறா சிக்கியதைப் பார்த்து, தாங்களும் சிக்கிக் கொண்ட குஞ்சு புறாக்களைப் பார்த்து, பாசமே துன்பங்களுக்கு காரணம் என, புரிந்து கொண்டேன். நிலைகுலையாமல் இருக்க வேண்டும் என்பதை, நூற்றுக்கணக்கான நதிகள் பாய்ந்தாலும் கலங்காமல் இருக்கும் கடலைப் பார்த்து, புரிந்து கொண்டேன். சிறிது <உணவே போதும் என்பதை, மலரில் தேன் குடிக்கும் வண்டிடம் கற்றேன். மீன் துண்டுடன் பறந்த பருந்தை, பிற பருந்துகள் துரத்தின. அந்தப் பருந்து, மீனை கீழே போடவே, விரட்டிய பருந்துகள் அதை விட்டு விட்டன. இதில் இருந்து உலகத்தின் மீது ஆசையை விட்டால், எல்லா துன்பமும் பறந்துவிடும் என்று உணர்ந்தேன்!' இப்படி, வாழ்வுக்கு தேவையான அரிய கருத்துக்களை சொன்ன தத்தாத்ரேயரின் பிறந்தநாளன்று, அவரை நினைவு கூர்வோம். சென்னை கந்தாஸ்ரமம், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களில் தத்தாத்ரேயருக்கு சன்னிதி உள்ளது

Thursday, March 24, 2011

காமராஜரின் பண்பு .



நெல்லைக்கண்ணன் : கடந்த 1962 பொதுத் தேர்தல். செய்தியாளர்கள், நேருவிடம் கேட்கின்றனர், "பிரதமர் ஆனவுடன் நாட்டிற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?' நேரு கோபம் கொள்கிறார். "படித்த நீங்கள், எப்படி இந்தக் கேள்வியைக் கேட்கலாம்? தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கிறது. தேர்தல் முடிந்து, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை எனத் தெரிந்து, அப்படியே காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சியின் எம்.பி.,க்கள் கூடித் தான், தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தனை இருக்கிற போது, எப்படி இப்படி ஒரு ஜனநாயக விரோதமான கேள்வியைக் கேட்கலாம்' என்றார்.
இன்றோ, "ஆறாவது முறையும் நாங்கள் தான்' என்கின்றனர். இதுவே ஜனநாயகத்தையும், மக்களையும் அவமதிக்கிற செயல் தான் என்பதை, யாரும் உணர மறுக்கின்றனரே.


கடந்த, 1967 தேர்தல். காமராஜர் தோற்றுப் போகிறார். விருதுநகரிலே நண்பர்கள், மறு எண்ணிக்கைக்கு முயல்கின்றனர் எனத் தெரிந்தவுடன் காமராஜர், அதை உடனடியாக நிறுத்தச் சொல்கிறார். "நாம வாங்கின சுதந்திரம் உண்மை. நேருவும், காங்கிரசும் தந்த ஜனநாயகம் உண்மை என்பதெல்லாம் நிரூபணமாயிட்டுல்லா. நம்ம உழைப்பு வீண் போகல. அதான் நம்ம தோல்வி உணர்த்தும் பாடம்' என்றார்.

அடுத்து அவர் சொன்ன செய்தி, "தி.மு.க., இப்பத்தான் ஆட்சிக்கு வந்திருக்கு. ஆட்சியின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொள்ளவே ஆறு மாதம் ஆகும். அதுவரை இந்த ஆட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது' என்றார்.

அண்ணாதுரையும், ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கினார். காமராஜர், பக்தவத்சலம் என்று அனைவரையும் போய் பார்த்து, ஆதரவைக் கேட்டார். ஆறு மாதம் கழித்து தான் காமராஜர், ஆட்சி குறித்து தன் கருத்துக்களைத் தெரிவித்தார். அதற்கு கருணாநிதி, "ஒரு குழந்தை பேசவேயில்லை என்று தாய் வருத்தப்பட்டாள். அந்தக் குழந்தை பேசியது, "அம்மா நீ எப்ப தாலியை அறுப்பாய்' என்று கேட்டது. அது போலத் தான் காமராஜர் பேசுகிறார்' என்று கூறினார்.
பிளவுபட்ட காங்கிரசின் பழைய காங்கிரஸ் தலைவராக காமராஜர், 1971 பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார். இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெற்றது. "ரஷ்யாவில் இருந்து மை கொண்டு வந்து, ஓட்டுச் சீட்டுகளில் தடவி, வெற்றி பெற்றுவிட்டனர்' என்றார் குமரி அனந்தன்.

அது குறித்து சோ கேட்ட போது, காமராஜர், "தோத்துப் போயிட்டோம்னேன். இது என்ன சிறுபிள்ளைத் தனமான பேச்சு' என்று கடிந்து கொண்டார்.

"உங்கள் காலுக்குச் செருப்பாய் இருந்தேனே. கடலில் தூக்கி வீசினால் கட்டுமரமாய் இருந்தேனே. உங்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் துலக்குகிற வேலைக்காரியாக இருந்தேனே' என்றெல்லாம் புலம்பவில்லை.

நாகர்கோவில் இடைத்தேர்தல். காமராஜர் காங்கிரஸ் வேட்பாளர். சுதந்திரக் கட்சி, அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறது. 1963ல் தி.மு.க.,வில் இருந்து கொண்டே, "காமராஜர் என் தலைவர்; அண்ணாதுரை என் வழிகாட்டி' என்று பேசிய எம்.ஜி.ஆர்., "காமராஜரை எதிர்த்து பிரசாரம் செய்ய வர மாட்டேன்' என்றார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று, "குளிரூட்டப்பட்ட அறைகளில் தான் இருக்க வேண்டும்' என்று டாக்டர் மில்லரால் சொல்லப்பட்ட அண்ணாதுரையை, திரைப்பட ஒளிவிளக்குகளிலே, வெப்பத்தில் நிறுத்தி, காமராஜருக்கு எதிராக பேச வைத்து, அந்த திரைப்படத்தை நாகர்கோவில் தொகுதி முழுவதும் போட ஏற்பாடு செய்தவர் கருணாநிதி. இன்றைய காங்கிரஸ் வீரர்களுக்கு இதுவெல்லாம் நினைவில் இருக்காது.

நாகராஜா திடலில் பொதுக் கூட்டம். சின்ன அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். காமராஜர் வந்துவிட்டார். சின்ன அண்ணாமலை, ராஜாஜி குறித்து பேசத் துவங்கினார். திடீரென எழுந்த காமராஜர், அவர் சட்டையைப் பிடித்து, இழுத்து, "நிறுத்துன்னேன்... அவரை நீ எப்படிப் பேசலாம்' என்று நிறுத்தினார். இத்தனைக்கும், காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியதே ராஜாஜி தான்.

Saturday, March 19, 2011

Dead sea;

Sitting in the Geography class in school, I remember how fascinated I was when we were being taught all about the Dead Sea. As you probably recall, the Dead Sea is really a lake, not a sea (and as the Geography teacher pointed out, “if you understood that, it would guarantee 4 marks in the term paper!”)
It is so high in salt content that the human body can float easily. You can almost lie down and read a book! The salt in the Dead Sea is as high as 35% - almost 10 times the normal ocean water. And all that saltiness has meant that there is no life at all in the Dead Sea. No fish. No vegetation. No sea animals. Nothing lives in the Dead sea.

And hence the name: Dead Sea.

While the Dead Sea has remained etched in my memory, I don't seem to recall learning about the Sea of Galilee in my school Geography lesson. So when I heard about the Sea of Galilee and the Dead Sea and the tale of the two seas - I was intrigued. Turns out that the Sea of Galilee is just north of the Dead Sea. Both the Sea of Galilee and the Dead Sea receive their water from river Jordan. And yet, they are very very different.

Unlike the Dead Sea, the Sea of Galilee is pretty, resplendent with rich, colorful marine life. There are lots of plants. And lots of fish too. In fact, the sea of Galilee is home to over twenty different types of fish.

Same region, same source of water, and yet while one sea is full of life, the other is dead. How come?

Here apparently is why. The River Jordan flows into the Sea of Galilee and then flows out. The water simply passes through the Sea of Galilee in and then out - and that keeps the Sea healthy and vibrant, teeming with marine life.

But the Dead Sea is so far below the mean sea level, that it has no outlet. The water flows in from the river Jordan, but does not flow out. There are no outlet streams. It is estimated that over a million tons of water evaporate from the Dead Sea every day. Leaving it salty. Too full of minerals. And unfit for any marine life.

The Dead Sea takes water from the River Jordan, and holds it. It does not give. Result?
No life at all. Think about it.

Life is not just about getting. It is about giving. We all need to be a bit like the Sea of Galilee.

We are fortunate to get wealth, knowledge, love and respect. But if we don't learn to give, we could all end up like the Dead Sea. The love and the respect, the wealth and the knowledge could all evaporate. Like the water in the Dead Sea.

If we get the Dead Sea mentality of merely taking in more water, more money, more everything the results can be disastrous. Good idea to make sure that in the sea of our own lives, we have outlets. Many outlets. For love and wealth - and everything else that we get in our lives. Let’s ensure we don't just get, we give too. Open the taps. And we are going to open the floodgates to happiness.

Make that a habit. To share. To give. And experience life. Experience the magic!

Thursday, March 17, 2011

கர்மவீரர் காமராஜர்

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு.
அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். "சப்வே' திட்டத்தின், "டெக்னிக்கல்' விவரங்களை எடுத்துச் சொல்வது என் சித்தப்பாவின் பொறுப்பாகிறது.
அவர் பேச ஆரம்பித்தார். காமராஜருக்கு ஆங்கிலம், புரியுமோ, புரியாதோ என்ற சந்தேகத்தில் அவர் தமிழில் பேச ஆரம்பித்து, "டெக்னிக்கல்' விவரங்களைத் தமிழில் சரியாக விளக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.
அவரைப் பார்த்து, "எனக்கு புரியுமோ, புரியாதோன்னு தானே தமிழில் பேச முயற்சி பண்றீங்க? பரவாயில்லை. இங்கிலீஷிலேயே பேசுங்க. எங்கேயாவது ஒண்ணு, ரெண்டு பாயின்ட் புரியலேன்னா, நான் உங்களைக் கேட்டுக்கிறேன்...' என்று கூறியிருக்கிறார் காமராஜர். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா, "சப்வே' திட்டத்தை விவரித்துள்ளார்.
ஏதோ ஓரிடத்தில் அவரது பேச்சை நிறுத்தி, விளக்கம் கேட்டிருக்கிறார் காமராஜர். இதன் பிறகு விவாதம் ஆரம்பித்திருக்கிறது.
மத்திய அரசின் பிரதிநிதியாக வந்திருந்த மந்திரி, "இந்த, "சப்வே' கட்டுவதற்கு செலவு அதிகமாகும். எனவே, இதை இப்போது கட்ட முடியாது...' என்று பேசியிருக்கிறார். காமராஜருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. எழுந்தார்.
மத்திய மந்திரியை வெறித்துப் பார்த்து, "உட்காருய்யா; கட்ட முடியாதுன்னு சொல்லவா கான்பிரன்ஸ் போட்டோம்? எப்படி கட்டி முடிக்கிறதுன்னு தீர்மானம் செய்யத் தான் இந்த மீட்டிங்; ஏன் கட்ட முடியாதுன்னு காரணம் காட்டற மீட்டிங் இல்லை இது. "முடியாது, முடியாது'ன்னு சொல்லவா மந்திரியானீங்க, நீங்க? மந்திரின்னா, எப்படி செய்து முடிக்க முடியும்ன்னு வழி தேடறவன்; முடியாதுன்னு சொல்றவன் இல்லை.
"முடியாதுன்னு சொல்லவா டில்லியிலேருந்து இங்கே வந்தீங்க? அங்கேயிருந்தே சொல்லியிருக்கலாமே! முடியாதாம்... முடியாது! இதுக்கா ஜனங்க ஓட்டுப் போட்டாங்க. நீ பேசாம உட்காரு; நான் பிரைம் மினிஸ்ட்டர்கிட்டே பேசிக்கிறேன்; "சப்வே' கட்டறோம்; அதான் முடிவு. எப்படின்னு டிஸ்கஸ் பண்ணி, விவரங்களை எடுத்துக்கிட்டு என்னை வந்து பாருங்க...' என்று கூறிச் சென்றார் காமராஜர். "சப்வே' கட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த நான், காமராஜரின் செயல் ஆர்வத்தைக் கண்டு வியந்தேன். அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துப் பேச ஆரம்பித்த அதிகாரியைக் கோபிக்கவில்லை. அவருக்கு நம்பிக்கை அளித்து, பேச ஊக்குவித்தார் - பெருந்தன்மை.
தனக்குப் புரியாத இடத்தில் புரிந்தது போல நடிக்கவில்லை. அர்த்தமும், விளக்கமும் கேட்டுப் புரிந்து கொண்டிருக்கிறார் - போலித்தனம் கலக்காத எளிமை.
முட்டுக்கட்டை போட முனைந்த மத்திய மந்திரியைத் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார் - செயல் ஆர்வம் அற்றவர்கள் மீது பீறிட்டெழும் கோபம்.
"சப்வே கட்டுகிறோம். தீர்மானம் செய்து திட்டங்களை முடித்து வைக்கத்தான் ஜனங்க ஓட்டுப் போட்டிருக்கின்றனர்!' என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் - மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் துடிப்பு.
"பிரைம் மினிஸ்டரிடம் நான் பேசிக்கிறேன்!' என்று கூறியிருக்கிறார் - தன்னம்பிக்கை, அரசியல் செல்வாக்கு.
"சப்வே' கட்டி முடிக்கப்பட்டது - சாதனை.
இப்படி இந்த ஒரு நிகழ்ச்சியில் அவரது பல குணாதிசயங்கள், பல கோணங்களில் வெளிப்பட்டு, அவர் எவ்வளவு மதிப்புக்குரியவர் என்று நினைத்துப் பார்த்து உணர்ந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல; எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம். காமராஜர் வாழ்ந்த விதத்தை ஆழ்ந்து நினைத்துப் பார்க்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி குறிப்பிட்டுள்ளார் "சோ'.

Monday, March 14, 2011

பெருந்தலைவர் காமராஜர்

காமராஜர் முதல்வராக இருந்தபோது, மதுரைக்குச் சென்றார். இரவில் அவர் தங்குவதற்கு விருந்தினர் மாளிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர் மாளிகையில் மின்சாரம் இல்லாததால், மின்வாரிய ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.காமராஜர், களைப்போடு காத்திருந்த நிலையில், மின்சாரம் வருவதாய் தெரியவில்லை.
உடனே அங்கிருந்தவர்களிடம், "கட்டிலைத் தூக்கி வந்து வேப்பமரத்தடியில் போடு' எனக் கூறினார். எவ்வித தயக்கமும் இன்றி அந்தக் கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கத் தயாரானார்.அப்போது அவர் தலைமாட்டில், ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டு இருந்தார். அவரைப் பார்த்து, "நீ ஏன் இங்கு நிற்கிறாய்? என்னை யாரும் தூக்கிக்கொண்டு போய்விட மாட்டார்கள். நீ போய் தூங்கு...' என சொல்லி, அவரை அனுப்பி விட்டு, படுத்து உறங்கினார் முதல்வர் காமராஜர். அத்தனை எளிமையாய் முதல்வர்கள் இருந்தது அந்தக் காலம்...

அண்ணாதுரை நினைவுகள்

அண்ணாதுரை நினைவுகள் : அரசியல் ரீதியாக, தம்மை தாக்கிப் பேசுபவர்களை அண்ணாதுரையும் பதிலுக்கு விமர்சனம் செய்வதுண்டு. ஆனால், விமர்சனத்துக்குள்ளாகிறவர்களே ரசித்து சிரிக்கும்படியாகத் தான் இருக்கும். அதில் ஒரு சம்பவம்.
கடந்த 1962 பொதுத் தேர்தலில், தென்சென்னை லோக்சபா தொகுதியில் தி.மு.க., சார்பில், நாஞ்சில் மனோகரன் நிறுத்தப்பட்டார். தி.மு.க.,விலிருந்து விலகிய ஈ.வி.கே.சம்பத்தும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அவர், தன் பிரசாரத்தின் போது, "சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கப் போவதாக' பேசி வந்தார்.
இதற்கு அண்ணாதுரை பதிலடி கொடுத்து பேசும் போது, "சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாம்; அது ஒன்றும் பெரிய விஷயமில்லை; ஆனால், அதன் பிறகு வெளியே வருவது சிங்கமா, ஆளா என்பது தான் முக்கியம்' என்றார். பார்வையாளர்கள் மட்டுமல்லாது, சம்பத்தையும் சிரிக்க வைத்தது இந்த பதிலடி.
ஈ.வெ.ரா.,வை தலைவராக ஏற்றுக் கொண்டு, அவர் இட்ட கட்டளையை அப்படியே நிறைவேற்றி வந்தவர் அண்ணாதுரை. ஆனால், அண்ணாதுரையை ஒதுக்கி வைத்து, நோகடிக்கும் பணியை ஈ.வெ.ரா., அடிக்கடி செய்துள்ளார்.
திராவிட நாடு பத்திரிகையில், "தம்பிக்கு கட்டுரை' பகுதியில் வந்த ஒரு பகுதி: இது வரையிலும், இனி மேலும், ஒரு தலைவனுக்கு கீழ்படிந்து நடப்பதில், என்னை விட வேறு யாரும் உண்டா? உதாரணத்திற்கு நான் ஒன்று கூறுவேன்; வட நாட்டில் நான் அவரோடு (ஈ.வெ.ரா.,) சுற்றுப் பயணம் செய்தேன். லக்னோ பல்கலைக் கழகத்தில் ஈ.வே.ரா., தமிழில் பேசினார். நான் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். மொழி பெயர்த்த பிறகு, அந்த மாணவர் கூட்டத் தலைவர், நான் எம்.ஏ., படித்தவன் என்பதை அறிந்து, என்னையும் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறினார்.
நான் ஈ.வெ.ரா.,வை திரும்பிப் பார்த்தேன். "பேசாதே' என்றார்; நான் பேசவில்லை. மறுபடியும் அவர்கள் வற்புறுத்தினர். நான் மீண்டும் கேட்டேன். ஈ.வெ.ரா., "பேசக் கூடாது' என்று தடை போட்டார். மூன்றாவது முறையாக அவர்கள் வற்புறுத்தினர்.
அப்போது, " நான் பேசுவதற்காக வரவில்லை. ஈ.வெ.ரா.,வின் பேச்சை மொழி பெயர்க்கத்தான் வந்தேன் என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லு' என்றார்; நானும் அதை எடுத்துச் சொன்னேன். அவ்வளவு அடக்க ஒடுக்கமாக ஈ.வெ.ரா.,விடம் நான் நடந்து கொண்டேன். அவருக்கு கிடைத்த அடக்க ஒடுக்கமானவர்களில், நான் தான் கடைசி ஆள்!
ஈ.வெ.ரா.,விடம் விசுவாசம் மிக்க பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்ற பேச்சாளர், ஊர் ஊராகச் சுற்றி, தொண்டை வற்றப் பிரசாரக் கூட்டங்களில் பேசி, இறுதியில் காசநோய் கண்டுபடுத்தார். அவருக்கு மருத்துவச் செலவுக்காக உதவி செய்ய ஈ.வெ.ரா., விரும்பவில்லை. "கண்டதையும் குடித்துக் கெட்டுக் கிடந்தால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று ஈ.வெ.ரா., கூறிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகவல் தெரிந்ததும், மனம் கேட்காமல், 5,000 ரூபாய் திரட்டி, மதியழகன் மூலமாக, தாம்பரம் காசநோய் மருத்துவமனையில் இருந்த அழகிரியிடம் சேர்த்தார். அப்போது, "நான் யாருக்காக பரிந்து பேசி அண்ணாவைத் தூற்றினேனோ, அவர் என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால், நான் கண்டபடி தூற்றிப் பேசிய அண்ணாதுரை, எனக்கு உதவி செய்துள்ளார். இதை நான் என்றும் மறக்க மாட்டேன்' என, கண்ணீர் விட்டு மதியழகனிடம் கூறினாராம் அழகிரி.

Thursday, February 17, 2011

A Great True story

This is a meaningful nice story, Na na. a True story.

A Great True story

This is a true story that had happened in 1892 at Stanford University.

A young, 18-year-old student was struggling to pay his fees. He was an orphan, and not know­ing where to turn to - for money, he came up with an idea. He, with a friend decided to host a musical concert on the Campus to raise money for their education.

They approached the Great Pianist 'Ignacy J. Paderewski' His manager demanded a guaranteed fee of $2000 for the piano recital. A deal was struck. And the boys began to work to make the concert a success.

The big day arrived. "Paderewski" performed at Stanford. But unfortunately, they had not managed to sell enough tickets. The total col­lection was only $1600.

Disappointed, they went to Paderewski and explained their plight. They gave him the entire $1600, plus a cheque for the balance $400. They promised to honour the cheque soonest possible.

"No." said Paderewski. "This is not acceptable." He tore up the cheque, returned the $1600 and told the two boys "Here's the $1600. Please deduct whatever expenses you have incurred. Keep the money you need for your fees. And just give me whatever is left." The boys were surprised, and thanked him profusely.

It was a small act of kindness. But it clearly marked out Paderewskias a great human being. Why should he help two people he did not even know?

We all come across situations like these in our lives. And most of us only think "If I help them, what would hap­pen to me?" The truly great people think,"If I don't help them, what will happen to them?" They don't do it expecting something in return. They do it because they feel it's the right thing to do.

Paderewski later went on to become the Prime Minister of Poland. He was a great leader, but unfortunately when the World War began, Poland was ravaged. There were over 1.5 mil­lion people starving in his country, and no money to feed them. Paderewski did not know where to turn for help. He reached out to the US Food and Relief Administration for help.

The head there was a man called "Herbert Hoover" - who later went on to become the US President. "Hoover" agreed to help and quickly shipped tons of food grains to feed the starving Polish people. A calamity was averted.

"Paderewski" was relieved. He decided to go across to meet "Hoover" and person­ally thank him.

When "Paderewski" began to thank "Hoover" for his noble gesture, "Hoover" quickly interjected and said, "You shouldn't be thanking me Mr. Prime Minister. You may not remember this, but several years ago, you helped two young students go through College in the US. I was one of them."

The world is a wonderful place. What goes around usually comes around. A Small World This!!