Wednesday, October 6, 2010

அவளுக்காக

அவளிடம் ஒரு வேண்டுகோள்
உனது தோழிகள் யாராவது என்னை யாரென்று கேட்டால் தயவு செய்து உன் நண்பன் என்று சொல்லிவிடாதே இவன் என்னை ஒருதலையாக காதலிக்கிறான் என்று சொல்லேன் அப்படியாவது என் காதலுக்கு அங்கீகாரம் கிடைக்குமல்லவா
உனக்கு தானே என்னைக்காதலிக்க பிடிக்கவில்லை
நான் உன்னைக் காதளிப்பதுமா பிடிக்கவில்லை .
நீ கோபத்தில் வார்த்தைகளை அம்பாக எய்த போது கூட வலிக்கவில்ல என் மனதிற்கு , இப்போது நீ என்னை அன்பாக நண்பன் என்று கூறும்போது வலிக்கிறது .



அப்படி அழைபதுதான் உனக்கு பிடிக்குமென்றால் அந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்கிறேன் உன்னைகாதளித்த தவறுக்காக .

நான் இந்த உலகில் அதிக சந்தோஷமாக இருந்த நாட்கள் ,வருத்தமாக இருந்த நாட்கள் எதை நினைத்துப்பார்த்தாலும் முதலில் நினைவுக்கு வருபவளே .
இருபது ஆண்டுகளில் பெரும் அனுபவத்தை இரண்டாண்டில் தந்தவளே . வாழ்கை என்ற உலக கோப்பையில் நான் காதல் என்ற அணியிடம் தோற்றிருக்கலாம் அனாலும் ஆட்ட நாயகன் விருது நிச்சயம் எனக்கு தான் உன்னைக் காதலித்ததால் .

அனைவரையும் கவரும் காந்தக் கண்கள் ,
அவள் சிரிக்கும் போது முன் வரிசைப் பற்களை பார்த்தால் பொறியியலுக்கான நோபல் பரிசை தர தோன்றும் படைத்தவனுக்கு ,
புள்ளிமானுக்கு கூட பொறமை வரும் துள்ளிவிளையாடும் அவள் கால் அழகைப் பார்த்தால்,
புலி கூட சைவமாக மாறிவிடும் இந்தப் புள்ளிமானை பார்த்தால் .
யாருக்குதான் ஆசை இருக்காது இப்படி ஒரு தேவதை வாழ்நாள் முழுதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ,அதனால் தான் அவள் மீது சிலர் காதல் கொண்டாலும் எனக்கு அவர்கள் மீது கோபம் வந்ததில்லை.

Sunday, October 3, 2010

சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்!
"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே. அப்படி நினைப்பது, ஆன்மீகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.""நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.""பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஒயாது சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பது தான்.""'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.""மனிதனே மேலானவன். எல்லா மிருகங்களை விடவும் எல்லா தேவர்களை விடவும் உயர்ந்தவன். மனிதனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை.""தனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால், தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும்.""உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன"."உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் ஒன்றும் இல்லாமல் வாழ்பவன் ஐம்பதினாயிரம் தவறுகளைச் செய்வான்.""தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக, அன்பு வேண்டும்.""எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.""முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி பிறகு உனக்குத் தானாக வந்து சேரும்.""பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம்"."கண்டனக் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக்கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்"."அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே. ஏனெனில் அது அவனுடைய பாதை, உன்னுடையது அல்ல. உன்னுடைய பாதையைக் கண்டுபிடித்து விட்டாயானால், அதன்பிறகு நீ செய்ய வேண்டியது எதுவும் இல்லை; கைகளைக் குவித்த வண்ணம் சரணடைந்து விடு. பாதையின் வேகமே உன்னை உனது லட்சியத்தில் சேர்த்து விடும்."