Wednesday, October 6, 2010

அவளுக்காக

அவளிடம் ஒரு வேண்டுகோள்
உனது தோழிகள் யாராவது என்னை யாரென்று கேட்டால் தயவு செய்து உன் நண்பன் என்று சொல்லிவிடாதே இவன் என்னை ஒருதலையாக காதலிக்கிறான் என்று சொல்லேன் அப்படியாவது என் காதலுக்கு அங்கீகாரம் கிடைக்குமல்லவா
உனக்கு தானே என்னைக்காதலிக்க பிடிக்கவில்லை
நான் உன்னைக் காதளிப்பதுமா பிடிக்கவில்லை .
நீ கோபத்தில் வார்த்தைகளை அம்பாக எய்த போது கூட வலிக்கவில்ல என் மனதிற்கு , இப்போது நீ என்னை அன்பாக நண்பன் என்று கூறும்போது வலிக்கிறது .



அப்படி அழைபதுதான் உனக்கு பிடிக்குமென்றால் அந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்கிறேன் உன்னைகாதளித்த தவறுக்காக .

நான் இந்த உலகில் அதிக சந்தோஷமாக இருந்த நாட்கள் ,வருத்தமாக இருந்த நாட்கள் எதை நினைத்துப்பார்த்தாலும் முதலில் நினைவுக்கு வருபவளே .
இருபது ஆண்டுகளில் பெரும் அனுபவத்தை இரண்டாண்டில் தந்தவளே . வாழ்கை என்ற உலக கோப்பையில் நான் காதல் என்ற அணியிடம் தோற்றிருக்கலாம் அனாலும் ஆட்ட நாயகன் விருது நிச்சயம் எனக்கு தான் உன்னைக் காதலித்ததால் .

அனைவரையும் கவரும் காந்தக் கண்கள் ,
அவள் சிரிக்கும் போது முன் வரிசைப் பற்களை பார்த்தால் பொறியியலுக்கான நோபல் பரிசை தர தோன்றும் படைத்தவனுக்கு ,
புள்ளிமானுக்கு கூட பொறமை வரும் துள்ளிவிளையாடும் அவள் கால் அழகைப் பார்த்தால்,
புலி கூட சைவமாக மாறிவிடும் இந்தப் புள்ளிமானை பார்த்தால் .
யாருக்குதான் ஆசை இருக்காது இப்படி ஒரு தேவதை வாழ்நாள் முழுதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ,அதனால் தான் அவள் மீது சிலர் காதல் கொண்டாலும் எனக்கு அவர்கள் மீது கோபம் வந்ததில்லை.

1 comment: