Thursday, November 26, 2009

ஒருநிமிடக்கதை 1



நண்பர்கள் ஒரு சேர்ந்து ஒரு பெரிய ஃப்ளாட்டில் 110 வது மாடியில் வசித்துவந்தனர்.ஒரு முறை வெளியே சென்று வரும் பொழுது கரண்ட் இல்லாததால் நடந்தே மேல் வரை செல்ல வேன்டி இருந்தது.110வது மாடி வரை செல்ல போர் அடிக்கும் என்பதால் ஆளுக்கு ஒரு கதை சொல்வது என்று முடிவெடுத்து கதை சொல்ல ஆரம்பித்தனர்.முதலில் ஒருவன் காதல் கதை சொல்ல ஆரம்பித்தான்.அவன் கதை சொல்லி முடிக்கும் போது 50 மாடிக்ளை கடந்திருந்தனர்.அடுத்தவன் ஒரு நகைச்சுவை கதையை ஆரம்பித்தான்.அவன் முடிக்கும் பொழுது 100 மாடிகளை கடந்து விட்டிருந்தனர்.இன்னும் 10 மாடிகள் தான் பாக்கி என்பதால் மூன்றாமவன் தான் ஒரு சிறிய சோக மான கதை சொல்லவிருப்பதாக கூறி சொல்லி முடிக்கவும் மற்ற இருவரும் அவன் கதையை கேட்டவுடன் மயங்கி விழுந்தனர்.அப்படி என்ன கதை அது.........அவன் கூறிய கதை..வீட்டு சாவியை மறந்து காரிலேயே மறந்து விட்டதாக கூறினான்.

No comments:

Post a Comment