Wednesday, November 25, 2009

சிந்தனையாளர்.பெர்னாட்ஷா.


பத்திரிக்கையாளர் ஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷாவைப் பார்த்து, தங்களை எல்லோம் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்களே ஏன்? தாங்கள் மட்டும் தான் சிந்திக்கின்றீர்களா? மக்கள் யாரும் சிந்திக்கவில்லையா? என்று கேள்வி கேட்டாராம்,அதற்குப் பெர்னாட்ஷா,எல்லோரும் சிந்திக்கிறார்கள்.... ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரு முறையோ தான் சிந்திக்கிறார்கள். நான் வாரத்துக்கு இருமுறை சிந்திக்கிறேன். அதனால் தான் என்னைச் சிந்தனையாளர் என்று அழைக்கிறார்கள்.என்று விடையளித்தாராம்.எவ்வளவு சரியான விடை. ஆம் மனிதன் ஒரு சிந்திக்கத் தெரிந்த விலங்கு என்பதாலோ என்னவோ,மனித சிந்தனைகள் செக்கு மாடுபோல ஒன்றையே தான் சிந்தித்தவாறு இருக்கிறது.பணம் பணம் பணம் என அதை மட்டுமே மையமிட்டதாக மனித சிந்தனை அமைந்துவிடுவதால் மனிதம் செத்துவிடுகிறது. வேறு எதையும் அவனால் சிந்திக்க இயலவில்லை ஆண்டுக்கு ஒரு முறையோ,இரு முறையோ தான் தாம் செய்வது சரியா? தவறா? எனபதைக்கூட சிந்திக்க முடிகிறது.தான்,தன் குடும்பம், தன் தலைமுறை என உண்டதையே உண்டு கண்டதையே கண்டு பேசியதையே பேசி.......... புதிதாகச் சிந்திக்க வேறு களம் இன்றி வாழ்ந்து மடியும் மானிடர்களை எவ்வாறு சிந்தனையாளர் என அழைப்பது..? என்ற பெர்னாட்ஷாவின் கேள்வி மிகவும் சரியாகவே எனக்குப் படுகிறது.

No comments:

Post a Comment