Wednesday, November 25, 2009

என்னத்தை சொல்ல????

இன்று தற்செயலாக Nat Geo சானெலில் IC 814 கந்தகார் விமான கடத்தல் பற்றிய எபிசொட் ஒன்று பார்த்து கொண்டிருந்தேன். பார்த்த பின் வெகு நேரத்துக்கு என் சினத்தை அடக்கி கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.. உங்க அனைவருக்கும் அந்த சம்பவம் நினைவிருக்கும் என்று நினைக்கிறன். தெரியாதவர்களுக்காக இதோ அதன் சாராம்சம்டிசம்பர் 24 1999 - காத்மாண்டுவிலிருந்து விமானம் கிளம்பியது...கிளம்பிய போதே துப்பாக்கி சத்தம் கேட்டதாக Air traffic control கூறியது.ஐந்து ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் விமானியை மிரட்டி லக்னோவை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை லகோரை நோக்கி திசை திருப்பினார்கள்.லகோரில் விமானத்தை தரை இறக்க அனுமதிக்க படாததால் விமானம் அம்ரிஸ்தரில் தரை இறக்க பட்டு கடத்தல்காரர்கள் மிரட்டலால் refuel செய்யப்பட்டது.25 நிமிடங்களுக்கு பிறகு கட்யல் என்ற பயணியை கொன்று போட்டு விமானம் கிளம்பியதுபின் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விமானம் பாகிஸ்தான் - காபுலில் தரை இறக்கப்பட்டு , refuel செய்யப்பட்டு துபைக்கு சென்றது.UAE அரசாங்கம் பெண்களையும் குழந்தைகளையும் விடுவிக்க கோரியது.25 பயணிகளை கடத்தல்காரர்கள் விடுவித்தனர். இறந்து போன கட்யல் உடம்பையும் ஒப்படைத்தனர்.பின்பு அடுத்த நாள் காலை விமானம் கண்டகார் சென்று இறங்கியது.அங்கு இந்தியா அரசாங்கம் கடத்தல்காரர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது.பிடித்து வைத்திருந்த 154 பயணிகளை விடுவிக்க 35 தீவிரவாதிகளையும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் விலையாக கேட்கப்பட்டது.டிசம்பர் 31 1999 இந்தியா 3 தீவிரவாதிகளை விடுவித்த பின்பு பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.இது இந்தியா வில் நடந்தது ...இன்னொரு சம்பவம் இஸ்ரேலில் நடந்தது இதோஇஸ்ரேலை சேர்ந்த ஒரு விமானம் இதே போல் ஜூலை 4, 1976 இல் பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்டது.பின்பு அந்த விமானம் உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. உகண்டவும் சேர்ந்து இதில் ஈடுபட்டிருப்பது அப்போது தான் அவர்களுக்கு தெரிய வந்தது. பயணிகள் உகண்டா air force base இல் அடைத்து வைக்க பட்டிருந்தார்கள்.இஸ்ரேல் தனது ராணுவத்தை uganda ராணுவ வீரர்கள் போல் உடை அணிய செய்து , உகண்டா ராணுவத்தை போலவே எல்லாவற்றையும் imitate செய்ய வைத்து தனது போர் விமானத்தை உகண்டா air force base இல் தரை இறக்கியது.அங்கு சென்றதும் தாக்குதலை ஆரம்பித்து 3 நிமிடங்களுக்குள் பாதி கடத்தல் காரர்கள் கொல்ல பட்டனர். உகண்டா வீரர்களை போல் உடை அணிந்து தாக்குதல செய்யப்பட்டதும் கடத்தல் காரர்கள் குழம்பி போயினர். அத்தனை பயணிகளையும் விடுவித்து நாடு திரும்பியது இஸ்ரேலிய படை.இந்த மொத்த operation இல் ஒரு இஸ்ரேலிய commando இறந்து போனார்.அப்போது உகண்டாவின் ஆளுநராக இடி அமீன் இருந்தார். இஸ்ரேலிய விமானம் உகண்டாவில் தரை இறங்கும் போது ஒரு கருப்பு mercedes மற்றும் 2 land rover வண்டிகளுடன் தரை இறங்கினர். அது இடி அமீனோ அல்லது வேறு யாரோ ஒரு high ranking official ஒ வருவது போன்ற தோற்றத்தை அளிப்பதர்க்காக.இந்த கடத்தல் சம்பவம் நடந்த வுடன் உகண்டா விமான நிலையம் போலவே ஒரு partial replica அமைத்து இஸ்ரேலிய ராணுவம் planning செய்தது. இதை அமைக்க உதவிய மக்களையும் இஸ்ரேலிய ராணுவம் operation முடியும் வரை அடைத்து வைத்திருந்தது. அப்படியாக ரகசியத்தை பாதுகாத்து இந்த செயலை வெற்றிகரமாக முடித்தனர்.கடத்தி வைக்க பட்டிருந்த பயணிகளில் 3 பேர் தவறுதலாக operation சமயத்தில் கொல்லப்பட்டனர். 75 வயது மூதாட்டி ஒருவர் மூச்சைடைப்பு காரணமாக ஆஸ்பதிரியில் அனுமதிகபடிருந்தார். அவர் operation கு பிறகு உகண்டா ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். Yonatan Netanyahu என்ற இஸ்ரேலிய கமாண்டோ வும் கொல்லப்பட்டார். அவர் பெயரில் தான் இந்த operation இன்றளவும் அறியபடுகிறது.என்னத்தை சொல்ல????

No comments:

Post a Comment